Talk:முதற் பக்கம்

From Meta, a Wikimedia project coordination wiki

ஸநாதன தர்மம் என்ன ?

எங்களது மதம் சனாதன தர்மம். அதன் நூல்கள் நான்கு வேதங்களும்,புராணங்களும்..... etc இதை ஆதியில் பகவானால் பிரம்மாவிற்க்கும்,பின் பிரம்மா நாரதருக்கும்,நாரதர் வியாசருக்கும்...இப்படி படிபடியாக சீடபரம்பரை மூலம் இறங்கி வந்தது.

யேச வேதவிதோ விப்ரா: யே சாத்த்யாத்ம விதோ ஜநா: I தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II -மஹாபாரதம் - 3.48-267

என்றபடி வேததர்மமான ஸநாதன தர்மத்தின் (இந்து மதத்தின்) ஸர்வ வல்லமை மிக்க கடவுள் ஸ்ரீமந் நாராயணனே / கிருஷ்ணரே.


ஸநாதன என்ற வார்த்தையை "ஆதி அந்தம் இல்லாத" என்று கூறுகின்றனர். எனவே, அதற்குத் தொடக்கமும் முடிவுமில்லை என்றே கொள்ளுதல் வேண்டும்.

எனவே, ஸநாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் மத வழிமுறையல்ல. இவ்வழிமுறை நித்தியமான ஜீவன் நித்தியமான முழுமுதற் கடவுளுடன் உறவு கொள்ளக்கூடிய நித்தியமான செயலாகும்.

ஆங்கில வார்த்தையான ரிலிஜன் (religion) என்பது ஸநாதன தர்மம் என்பதிலிருந்து சற்று வேறுபட்டதாகும். ரிலிஜன் என்பது ஒரு வித நம்பிக்கையைக் குறிக்கும்—ஆனால் நம்பிக்கை என்பது மாறக்கூடும். ஒரு குறிபிட்ட முறையில் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கலாம், அவர் தமது நம்பிக்கையை மாற்றி வேறொரு முறையைக் கடைபிடிக்கலாம். ஆனால் ஸநாதன தர்மம் என்பது மாற்ற முடியாத செயலைக் குறிக்கின்றது. உதாரணமாக, நீரிலிருந்து திரவத் தன்மையும், நெருப்பிலிருந்து வெப்பத்தையும் பிரித்து விட முடியாது. அதுபோலவே, நித்திய உயிர்வாழியின் நித்தியமான செயலைக் அதிலிருந்து பிரிக்க முடியாது. ஸநாதன தர்மம் உயிர்வாழியுடன் நித்தியமாக தொடர்பு கொண்டுள்ளது.

அஃது ஆரம்பமும் முடிவும் அற்றது என்றே கொள்ள வேண்டும். தொடக்கமும் முடிவும் இல்லாது, எல்லைகளால் வரையறுக்கப்பட முடியாமல் திகழக்கூடிய ஒன்றை ஒரு குறிப்பிட்ட (மதப்) பிரிவைச் சார்ந்ததாக ஒரு போதும் கருதக் கூடாது. ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைச் சேர்ந்த சிலர் ஸநாதன தர்மமும் ஒரு (மதப்) பிரிவென்று தவறாகக் கருதுவர். ஆனால் இது விஷயமாக நாம் ஆழமாகப் சென்று, நவீன விஞ்ஞானத்தின் கவனித்து பார்த்தால், ஸநாதன தர்மமானது, இவ்வுலகின் எல்லா மக்களுடைய, ஏன், பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுடைய கடமை என்பதை அறிய முடியும்.

ஸநாதனமல்லாத மத நம்பிக்கைக்கு மனித வரலாற்றின்; கால அட்டவணையில் ஏதாவது தொடக்கம் இருக்கலாம், ஆனால் உயிர்களுடன் நித்தியமாக இருக்கும் ஸநாதன தர்மத்தின் வரலாற்றில் இது போன்ற ஆரம்பமே இல்லை. அதிகாரபூர்வமான சாஸ்திரங்கள், உயிர்வாழிகளுக்கு பிறப்போ இறப்போ இல்லை என்று கூறுகின்றன.

ஒரு குறிப்பிட்ட பொருளுடன் ஒன்றியிருக்கும் தன்மையை தர்மம் எனும் சொல் குறிக்கிறது. நெருப்புடன் வெப்பமும் ஒளியும் இருக்கிறதென்று நாம் முடிவு செய்கிறோம், வெப்பமும் ஒளியும் இல்லாவிடில் நெருப்பு என்ற சொல்லுக்கு பொருளே இல்லை. இது போன்ற உயிர்வாழியின் முக்கியமான இன்றியமையாத அங்கத்தை நாம் கண்டு பிடிக்க வேண்டும். அந்த இன்றியமையாத அங்கம் அதன் நித்திய குணமாகும், அந்த நித்திய குணம் அதன் நித்திய தர்மமகும்.

உயிர் வாழியின் உண்மைநிலை (ஸ்வரூப), புருஷோத்தமரான முழுமுதற் கடவுளுக்கு சேவை செய்வதே. இதுவே சனாதன தர்மம். ....

ஒவ்வொரு உயிர்வாழியும் மற்றொரு உயிருக்கு சேவை செய்வதில் எப்போதும் ஈடுபட்டுள்ளதை நம்மால் எளிதாகக் காண முடியும். ஓர் உயிர்வாழி மற்ற உயிர்வாழிகளுக்கு பல்வேறு விதங்களில் சேவை செய்கிறான், அவ்வாறு செய்வதால் வாழ்வை அனுபவிக்கிறான். சேவகன் எஜமானுக்கு சேவை செய்வதைப் போல, கீழ் நிலை மிருகங்கள் மனிதனுக்கு சேவை செய்கின்றன. ஒருவன் தனது எஜமானருக்கு சேவை செய்ய, அவர் அடுத்தவருக்கும், அடுத்தவர் மற்றொருவருக்கும் என தொடர்ந்து ஒவ்வொருவரும் சேவை செய்து கொண்டுள்ளனர்.

இருந்தும், ஒரு குறிப்பிட்ட நேரம் சூழ்நிலை இவற்றின் அடிப்படையில் மனிதன் தன்னை ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைச் சேர்ந்தவனாக, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவன், பௌத்தன் அல்லது வேறு ஒரு பிரிவைச் சேர்ந்தவனாகக் காட்டிக் கொள்கிறான். இத்தகு அடையாளங்கள் ஸநாதன தர்மமல்ல. ஓர் இந்து தனது நம்பிக்கையை மாற்றி முஸ்ஸிமாகவும், ஒரு முஸ்ஸிம் தனது நம்பிக்கையை மாற்றி இந்துவாகவும், ஒரு கிறுஸ்துவன் தனது நம்பிக்கையை மாற்றி வேறொரு மதத்தினாகவும் மாறிக்கொண்டே போகலாம். ஆனால், பிறருக்குச் சேவை செய்தல் எனும் நித்தியக் கடமையானது எந்த சூழ்நிலையிலும் மத நம்பிக்கை மாற்றத்தால் பாதிக்கப்படுவதில்லை. இந்துவோ முஸ்ஸிமோ கிறிஸ்தவனோ எல்லாச் சூழ்நிலையிலும் ஒவ்வொருவரும் யாரோ ஒருவரது சேவகனே. எனவே ஒரு குறிப்பிட்ட (மத) நம்பிக்கையைப் பயிற்சி செய்வது ஸநாதன தர்மத்தை பயிற்சி செய்வ தாகாது. சேவை செய்வதே ஸநாதன தர்மாகும்.

உண்மையில், நாம் முழுமுதற் கடவுளுடன் சேவையின் மூலம் உறவு கொண்டுள்ளோம். முழுமுதற் கடவுள் பரம அனுபவிப்பாளராவார். உயிர்வாழிகளான நாம் அவரது சேவகர்கள். நாம் அவரது ஆனந்திற்காகப் படைக்கப்பட்டுள்ளோம், பரம புருஷ பகவானின் அந்த நித்திய இன்பத்தில் பங்குபெற்றால் நாமும் மகிழ்ச்சியுடையவராக ஆவோம். இல்லையேல் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. சுயமாக மகிழ்வது இயலாது. உதாரணமாக, உடலின் எந்த பகுதியும் வயிற்றுடன் ஒத்துழைக்காமல் மகிழ இயலாது. முழுமுதற் கடவுளுக்கு திவ்யமான அன்புக் தொண்டு புரியாமல் உயிர்வாழி மகிழ்ச்சியாயிருத்தல் என்பது சாத்தியமல்ல.

ஸநாதன தர்மம்[edit]

ஸநாதன தர்மம்